வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

வெளிநாடுவாழ் வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...


வரும் 11-10-2015 அன்று  “வலைப்பதிவர் திருவிழா-2015” புதுக்கோட்டையில் நிகழவிருப்பதை அறிந்திருப்பீர்கள்!
வருவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறீர்கள், சிலர் பயண முன்பதிவு செய்துவிட்டதாக மின்னஞ்சலிலும் செல்பேசியிலும் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது!

திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் உள்ள பதிவுப்படிவத்தை இதுவரை 48 பேர் நிரப்பி அனுப்பி ருப்பதாகத்தெரிகிறது-பார்க்க http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html 

இன்னும் பதிவுகள் தொடர்கின்றன... நீங்கள் இதுவரை படிவம் நிரப்பாமல் இருந்தால் உடன் நிரப்பிவிட வேண்டுகிறேன். ஒருவேளை கடைசிநேரத்தில் வர இயலாமல் போனாலும் பரவாயில்லை, விவரம் கிடைக்க வேண்டுமல்லவா?

வலைப்பதிவர் கையேடு
இம்முறை ஒரு புதிய முயற்சி எடுக்கிறோம் – 
உலகம் முழுவதும் உள்ள தமிழ் வலைப்பதிவரை அறிந்து கொள்ள உதவும் “தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015“ 

இதற்கு, வருவோர் வரஇயலாதோர் அனைவருமே தத்தம் சுயவிவரம் தருவதால் சரியான –இன்றைய- தகவல்களுடன் அனைவருமறிய ஒரு கையேடு கிடைக்கும் என்பதால் பதிவர்-படிவம் முக்கியத்துவம் பெறும்  முக்கியமாக வெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் தம் விவரங்களை –அவர்கள் விரும்பினால் தமிழ்நாட்டில் தொடர்புகொள்ளும் முகவரியுடன்- தரலாம்.இதற்கென விழாக்குழுவில் ஒரு குழுவினர் தனியே சுறுசுறுப்பாகச் செயல்பட்டு விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.

இதில் ஒரு வேண்டுகோளும் கூட..
15-9-2015 வரை வரும் விவரங்களைக் கொண்டே இக்கையேடு தயாரிக்கப் படவுள்ளது. பக்க அளவு அப்போதுதான் இறுதியாகும். அச்சிடும் செலவும் அப்போதே முடிவாகும். இதனை விழாவுக்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகவே தருவதென்றும், அச்சிடும் செலவை ஈடுகட்ட சில பக்கங்களில் விளம்பரம் வெளியிடலாம் என்றும் விழாக்குழு முடிவெடுத்துள்ளது. எனவே, வாய்ப்புள்ள நண்பர்கள் கடைசிப் பக்கம் மற்றும் உள் அட்டைகள் இரண்டு ஆக 3வண்ணப் பக்கங்களில் இடம்பெறும் விளம்பரங்களைப் பெற்றுத் தந்துதவலாம். உள்பக்கங்களில் ஒரு வண்ணம் மட்டுமே 

வெளிநாடுகளில் இயங்கிவரும் தமிழ்அமைப்புகள் தமிழ்ச் சங்கங்கள்- உதவும் தமிழர்களை அணுகி இதற்கு உதவிசெய்ய வேண்டுகிறோம். இது பற்றிய செய்தி விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டாம் என்பதால் தனியே மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

முக்கியமாக, 
வெளிநாடுவாழ் தமிழ்வலைப்பதிவர்கள் தமது நிதிஉதவி, 
விளம்பர உதவியுடன்– 
வரஇயலாதவர்–தமது வாழ்த்துரையை, கவிதையை 10,15வரிக்குள் தெரிவித்தால் அதை விழா அரங்கில் அழகாக எழுதி வைக்க விரும்புகிறோம். கவிதையாகவோ வாழ்த்துரையாகவோ தருக!

நேரில்வருவோர் தரும் சுய-அறிமுகத்தை அப்படி அப்படியே நேரலையில் தரவிருப்பதாலும், விழாவில் வெளியிடவுள்ள வலைப்பதிவர் கையேட்டில் அச்சிட்டுத் தரவிருப்பதாலும் தனியே தரவேண்டியதில்லை. (கூகுள் படிவத்தில் பதிவு செய்தல் போதும்)
அப்படியே தங்கள் வரவு(உடன்), 
நல்“வரவும்“ ஆகுக!
மின்னஞ்சல் தொடர்புக்கு-
bloggersmeet2015@gmail.com
--------------------------------------------------------- 

13 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி
    இப்பதிவர் சந்திப்பு ஒரு முன்மாதிரியான சந்திப்பாக நிச்சயம் அமையும்

    பதிலளிநீக்கு
  2. ஒன்றாம் தேதிக்குப் பிறகு நான் படிவத்தைப் பூர்த்தி செய்வேன் :-)

    பதிலளிநீக்கு
  3. விழா சிறப்புடன் நிகழ்வுற
    எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  4. பதிவுப்படிவத்தை இதில் வெளியிடுவதுதான் முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு நன்றி. புரிகிறது. வருகைப் பதிவுப் பட்டியலும், நன்கொடையாளர் பட்டியலும் இங்கேயும் விரைவில் வெளிவரும்.
      கடந்த சில ஆண்டுகளாகப் பதிவர் சந்திப்பில் பெரும்பணி ஆற்றிவரும் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இந்த விழாவிலும் பற்பல தொழில்நுட்ப உதவிகளைச் செய்து வருவதைப் புதுக்கோட்டை நண்பர்கள் நன்றியுடனே பார்க்கிறோம். அவரது உதவிக்கு வேறு கைம்மாறு இல்லையல்லவா? தாங்கள் விழாவிற்கு அவசியம் வரவேண்டும் அய்யா. நன்றி

      நீக்கு
  5. புதுக்கோட்டையில் வலைப்பதிவர் சந்திப்பின் சிறப்பினோடு -
    இங்கே - புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அந்தச் சொல்லுக்கான “பொருள்“ புரியும்தானே அய்யா? (வேறென்ன செய்ய? பொதுக்காரியங்களுக்காகப் பிச்சையெடுக்கவும் தயங்காத அன்னை தெரசாவின் கால்தூசுதான் நாம் என்றாலும் நாமும் நண்பர்களோடு இணைந்து ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் உந்துதல்தான் அய்யா தவறாக எண்ணற்க)

      நீக்கு
  7. புதுக்கோட்டை பதிவர்கள் உட்பட பலரும் பதிவுப் படிவத்தில் வருகையை பதிவு செய்ய வேண்டும் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  8. பதிவர் மாநாடு மிக நல்லமுறையில் சிறப்பாக நடக்கப் போவது அறிந்து மிக்க மகிழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் ஏற்ப்பாடு நடப்பதை பார்த்தால் அணைத்து பதிவர்களும் பங்கு பெற தோன்றுகிறது மாநாடு சிறக்க முன்னதாக நல் வாழ்த்துக்கள்
    salemscooby.blogspot.in & licsundaramurthy@gmail.com

    பதிலளிநீக்கு
  9. கையேடை இணைய வடிவில் வெளியிடுங்கள்,
    இன்னமும் எதற்கு அச்சு வடிவம் , தேவை அற்ற செலவும் கூட அது

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...