வியாழன், 10 செப்டம்பர், 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 27 / 30


மக்கள் எதைச் சாப்பிட்டாலும் அதில் பாதி அவர்களுடைய வயிற்றை நிரப்புகிறது. மீதிப்பாதி டாக்டர்களின் வயிற்றை நிரப்புகிறது---மருத்துவ அனுபவம் இது ! பாதி அளவு சாப்பிட்டால் உடம்பும் பாழாகாது, மருத்துவரின் தேவையும் இருக்காது.

நீங்கள் கவலையான மனநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், நல்ல உணவுகூட விஷத்தன்மையை ஏற்படுத்திவிடும். அதேசமயம்
நீங்கள் சந்தோஷம் பொங்கும் மனோநிலையில் இருக்கும்போது சாப்பிட்டால், விஷம்கூட தனது முழு பாதிப்பையும் தராமல் நின்றுபோகும் வாய்ப்புள்ளது----இது சாத்தியமும் சத்தியமும் கூட! சாப்பிடும்போது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்!
உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும் முழுப் பொறுப்பையும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாக்குழுவினர் செய்துவிடுவார்கள். அப்புறம் என்ன...நமக்கு சோறு முக்கியம் பாஸ்! சாப்புட வா....ங்...க!

சரவணபவன் கீழ 2 ம்வீதியில சாஸ்தாபவன் அருகில இருக்கு(சைவம்தான்) நிறைய கஷ்டமர்கள் உண்டு.

9 கருத்துகள்:

  1. ஆஹா ஜெயா 2 வயிற்றுடன் வாங்கன்னு சொல்லிட்டேன்...என் பதிவில் பாருங்க

    பதிலளிநீக்கு
  2. அட..! வயிறு நிறைஞ்சிட்டாலே போதுமே.! நிம்மதியாய்
    விழாப் பார்த்து ரசிச்சுடலாம்!..
    நானும் விழாவுக்கு போவோம் வா தங்கமே தங்கம்ன்னு
    என் வலையில் கூப்பிட்டிருக்கிறேன்.. வந்து பாருங்க!..:)

    பதிலளிநீக்கு
  3. உணவகத்தில் கஷ்டமர்கள் உண்டு என்று பயமுறுத்துகின்றீர்களே? கஷ்டம் தரவா?

    பதிலளிநீக்கு
  4. நமக்கு சோறு முக்கியம் பாஸ்
    அதுவா
    புதுக்கோட்டையில் நிறைய இருக்கே


    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...