ஞாயிறு, 18 அக்டோபர், 2015

அமெரிக்கத் தமிழ்ப் பதிவரின் அனுபவப் பகிர்வு!

அமெரிக்காவிலிருந்து நம் விழாவில் கலந்து கொண்ட
திரு நவீன் சீதாராமன் அவர்கள்
---------------------------------------------------------------------
அவர்களின் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவை 
நண்பர்கள் பார்க்க வேண்டுமென 
அன்புடன் அழைக்கிறேன் -


இணைப்புக்குச் செல்ல -
-------இங்கே சொடுக்குங்கள்------
http://manuneedhi.blogspot.in/2015/10/blog-post_16.html 

திவர்

அன்பிற்கினிய எம் தமிழுறவுகளே ! தோழர்களே !! வணக்கம்.
கடந்த (அக்டோபர்) 11-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை நகரமே கலை கட்டியது. ஆம் ! வலைப்பதிவர்கள் சந்திப்பு 2015, நான்காம் ஆண்டு திருவிழாவில் புதுக்கோட்டை நகரமே திக்கு முக்காடியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் கலந்துகொண்ட ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே,அமெரிக்காவிலிருந்து வந்த எனக்கும்வந்திருந்த தோழர்களுக்கும் மிக்சிறந்த மரியாதை செய்து,அற்புதமான முறையில் விழாவினை ஏற்பாடு செய்திருந்த விழாக்குழுவினருக்கு வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் வலைப்பதிவு தோழர்களின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு எதிர்வரும் அடுத்த பதிவர் விழாவுக்காகக் காத்திருக்கிறேன்.

காலையில் விழாவிற்கு வந்த நான் மாலையும் திரும்ப வந்துவிட்டேன்.  இடையில் சில மணி நேரங்கள் அரங்கில் இருக்க இயலாமைக்கு வருந்துகிறேன். தோழர்கள் என்னை மன்னிக்கவும். காரணம்என் நெருங்கிய தோழர் இல்லத்தில் ஓர் எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்தமையால் நான் அங்கு விரைந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. எனவேசில தோழர்களின் அற்புதமான சொற்பொழிவைக் கேட்க இயலவில்லையே என்ற வருத்தத்தை விழாக்குழுவினரின் அற்புதமான மிக நீண்ட காணொளி நிவர்த்தி செய்தது.

காலை முதல் விழா முடியும்வரை விழாக்குழுவினரின் சுறுசுறுப்பும்உபசரிப்பும் என்னைத் திக்குமுக்காடச் செய்தது.

விழாவில் கலந்து கொள்ள இயலாத தோழர்கள் தயவுசெய்து கீழ் காணும் சுட்டிகளின் மூலம் விழாவினை முழுவதுமாக கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்வதோடுதயவு செய்து கீழுள்ள வலைப்பதிவின் வாயிலாக அங்குள்ள கோரிக்கைகளை நிவர்த்தி செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் இன்னொரு தருணத்தில் நாமனைவரும் சந்திப்போம் என்று கூறி விழாக்குழுவினர் அனைவருக்கும் என் பாராட்டுகளை இங்கே சமர்ப்பிக்கிறேன். நன்றிவணக்கம்.

புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில்எந்தக் குறையும் இல்லை” என்றுவந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!
வலைப்பதிவர்களின் சந்திப்பு நிகழ்வுளுக்கான வலைப்பதிவு முகவரிக்கு அழுத்தவும்

தொடர்ந்து வாசிக்க : 
http://manuneedhi.blogspot.in/2015/10/blog-post_16.html 

வாழ்த்துகளுடன் 
நவின் சீதாராமன்
(அமெரிக்கா)  
------------------------
நன்றி - திருமிகு சீதா ராமன் அவர்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
-
கல்யாண வீட்டில் யார் வேலைகளைப்  பார்த்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களை மேடையில் பார்ப்பது அரிது
அப்படித்தான் நமது விழாவில்
முதல்நாள் மாலை தொடங்கி, விழாநாள் மாலைவரை உட்கார்ந்தார்களா என்றே தெரிந்துகொள்ள முடியாதஸ
எங்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி உதவி அலுவலராகப் பணியாற்றி, தற்போது திருச்சியில் பணியாற்றிவரும்
நமது விழா உணவுக்குழுத் தலைவர்
சகோதரி இரா.ஜெயலட்சுமியின் பணிகளை
நமது வாய்மட்டுமல்ல வயிறும் பாராட்டியதே!
http://jayalakshmiaeo.blogspot.in/
இவர்தான் அவர்-
வாழ்த்துவோம், பாராட்டுவோம்.
இவர் பணி தொடர நாமும் பின்செல்வோம்!
--------------------------------------

2 கருத்துகள்:

  1. அனைவருக்கும் மனம் முழுக்க திருப்தி... காரணம் சகோதரி இரா.ஜெயலட்சுமி அவர்கள்... பாராட்டுகள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...